வேதம் முழுவதிலும் தேவன் விசுவாசிகளை பெயர் சொல்லி அழைக்கிறார். நான் உன்னை பெயர் சொல்லி அழைக்கிற தேவன் என்று ஏசாயா 45:3ல் வாசிக்கிறோம் . வேதத்தில் உள்ள ஒவ்வொரு புஸ்தகத்திலும், நமக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா புஸ்தகத்தில் என் ஜனம், என் தாசன், யாக்கோபே, இஸ்ரவேலே என்றும், உன்னதப்பாட்டில் என் பிரியமே, என் ரூபவதியே, என் மணவாளியே என் சகோதரியே, என் உத்தமியே என்றும் அழைக்கிறார். இப்படி பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் நமக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சபை மக்களுக்கு ஐந்து விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை தொடர்ந்து தியானிப்போம்.