இந்த வருடத்தினுடைய எங்களுடைய இலக்கு, (Walk worthy of your calling) நாம் அழைக்கப்பட்டஎம்முடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் நடந்துகொள்வதே ஆகும். எப்பொழுது ஒரு தேவ பிள்ளை ஆண்டவரோடு ஒரு நெருக்கமான உறவைக் கொண்டு அவருடைய பிரசன்னத்தை சுமக்கிற ஒரு பாத்திரமாய் இருக்கிறாரோ, அப்பொழுது தான் அவருடைய வாயிலே இருந்து புறப்படுகிற வார்த்தையிலே வல்லமையிருக்கும். ஊழியங்களிலே வல்லமையிருக்கும். அவர்களுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும். தேவனுடைய பிரசன்னம் இல்லாத ஒரு மனிதனுடைய வாயிலே இருந்து எவ்வளவு தான் அழகாய் தேவனுடைய வார்த்தையைப் பேசினாலும், அந்த வார்த்தையிலே வல்லமை இருக்காது. ஆகவே பிரியமானவர்களே! இந்த 2013ம் ஆண்டு நாம் யாவரும் தேவன் எங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வைத்திருக்கிற அழைப்பிற்கு பாத்திரவான்களாய் வாழ நாம் எங்களை அர்ப்பணிப்போமாக.
