கழுதை பேசினால்

என் பெயர் கழுதை .இது தெரியாதா எங்களுக்கு என்று சொல்ல வேண்டாம். காரணம் வீட்டில் நீங்கள் கோபப்படும் போதெல்லாம் மனைவி பிள்ளைகளை திட்டுவதற்கு எங்கள் பெயரைத்தானே பயன்படுத்துகிறீர்கள் .இது சரியா? எங்களில் பல இனம் இருந்தாலும் எங்கள் வேலை ஒன்று தான் பொதி சுமப்பது. பொதி மட்டும் தான் சுமப்போம் என்று எண்ண வேண்டாம்.மனிதர்களையும், தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும் சுமந்தேன்.நாங்கள் சுமந்தவர்களிலே மிகவும் விஷேசமனாவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான். தேவாலயத்திற்க்கு அவரை நான் சுமந்த போது அநேகர் தங்கள் வஸ்திரங்களை தரையிலே விரித்தார்கள் .நான் அதன் மீது நடந்து சென்றேன் .கழுதையான எனக்கு எத்தனை பெருமை பார்த்தீர்களா? சிலர் மரக்கிளைகள் வெட்டி தரையிலே பரப்பினார்கள். ஏன்? என் கால் இடறி விழுவேன் என்றா?கர்த்தர் என்மேல் இருப்பதால் என் கால்கள் இடறுவதில்லை என்று அவர்களுக்கு தெரியாது போலும்.


"கழுதை கெட்டால் குட்டிச்சுவறு "என்று சொல்லுகிறீர்களே. நான் காணாமல் போன போது ஒருவன் என்னைத் தேடி வந்தான். கழுதையை தேடிப்போன அவன் சாமுவேலை சந்தித்து இஸ்ரவேலருக்கு இராஜாவாகிற பாக்கியம் அவனுக்கு கிடைத்தது .
தேவ சித்தம் செய்த தீர்க்கதரிசியை நான் பெத்தேலுக்கு சுமந்து சென்றேன். அவன் சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி தேவன் செய்தார். ஆனால் தேவன் சொன்ன வார்த்தையின் படி அந்த தீர்க்கதரிசி செய்யாமல் அப்பம் புசித்து, தண்ணீர் குடித்து தேவனுடைய வார்த்தையை மீறினபடியால் போகும் வழியில் ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனை கொன்றது. சிங்கம் என்னை கொல்லவில்லை .நான் மிருகமாக இருந்தாலும் தேவ சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்தவன் தெரியுமா?
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "என்று சொல்கிறீர்களே ! இது சரியா? என்னைப்பற்றி ஏசாயா சொன்னது உங்களுக்கு நினைவிருக்குமா. மாடு தன் எஜமானனையும் கழுதை தன் ஆண்டவரின் முன்னனையையும் அறியும்.என் ஜனங்களோ அறிவில்லாமலும், உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். எனக்கு கற்பூரமாகிய கர்த்தரின் வாசனை தெரியும், உங்களுக்கு தெரியுமா?
கழுதைதானே என்று என்னை அற்பமாய் எண்ண வேண்டாம். நானும் வேதத்தில் தேவனுடைய சித்தத்தை செய்து, அவரை மகிமை படுத்தினேன். தாவீது சவுலை சந்திக்க போன போது வெகுமதியான பொருட்களை சுமந்து சென்றேன். சிம்சோன் என்னுடைய தாடை எலும்புகளினால் ஆயிரம் பேரை கொள்ள நான் அவனுக்கு உதவி செய்தேன். காலேப்பின் மகள் அக்சாள் திருமணம் ஆனா போது அவளை சுமந்து சென்றவன் நான் .
இப்படி நான் வேதத்தில் எனது கடமைகளை செய்து முடித்திருக்கிறேன். நீங்களும் உங்களுக்குரிய தேவசித்தத்தை நிறைவேற்றி தேவனை மகிமை படுத்துங்கள்.
நன்றி ....
No comments:
Post a Comment