Pages

Showing posts with label Sunday Sermon. Show all posts
Showing posts with label Sunday Sermon. Show all posts

Monday, 4 March 2013

Return to Bethel பெத்தேலுக்குத் திரும்பு

ஆதியாகமம் 351-5 

கர்த்தருக்குப் பிரியமானவர்களே! உங்களை இயேசு பிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இன்று நான் உங்களோடு, பெத்தேலுக்குத் திரும்புங்கள் எனும் தலைப்பில் பேசப் போகின்றேன். இச்செய்தி நிட்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் பெரிதானதோர் மாற்றத்தைக் கொண்டு வரும் என விசுவாசிக்கிறேன். 

பெத்தேல் என்று நான் இங்கு குப்பிட விரும்புவது, தேவன் என்னை சந்தித்த இடம், நான் இரட்சிக்கப்பட்ட அந்த நாள், நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நாள், நான் தேவனை முகமுகமாய்த் தரிசித்த அந்த அனுபவத்தை ஆகும். அந்த பெத்தேலுக்குத் பெத்தேலுக்குத் திரும்பி வா.