Pages

Saturday 14 February 2015

மனித பயத்தை மேற்கொள்வது

Overcoming Fear of Man
“The righteous are bold as a lion.” 
நீதிமான்களோ சிங்கத்தைப்போல் தைரியமாய் இருக்கின்றார்கள்
நீதி PROVERB 28:1
Jesus sought to thin out the crowds with a difficult word, saying, “You must eat My flesh and drink My blood if you wish to be My disciples.” At this saying, the multitude and many of His disciples turned aside and no longer followed Him. Instead of running after them in an effort to make Himself understood and accepted, He watched them go. Then, turning to the Twelve, He said, “Do you also want to go away?” Here is a Man who is not afraid to be misunderstood because He is not afraid of people, what they will think, or what they will say about Him unjustly.

.

To overcome the fear of man, we must not only be willing to be misunderstood and unappreciated, we should expect it. Then we will be free to speak what God has given us and will not be troubled should others fail to grasp the significance of it.

இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றி வந்த அனேக சீஷர்களைப் பார்த்து, ”நீங்கள் என்னுடைய சீஷர்களாயிருக்க, என்னுடைய மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தை பாணம்பண்ண வேண்டும் என்று சொன்னபோது, அவரை பின்பற்றி வந்த அனேக ஜனங்களும், சீஷரில் அனேகரும், அவரைப் பின்பற்றாமல் விட்டு விலகிச் சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில், இயேசு அவர்களுக்குப் பின் சென்று அவர்களை எப்படியாகிலும் தம்மிடத்திற்கு திரும்பவும் அழைத்துக்கொண்டு வருவதை விட்டு விட்டு, அவர்கள் எல்லோரும் தம்மை விட்டு போவதை பார்த்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின் அவர் தம்முடைய 12 சீஷர்களையும் பார்த்து, நீங்களும் என்னை விட்டு போக மனதாய் இருக்கின்றீர்களா என்று கேட்டார்.
.
இங்கே, இயேசு கிறிஸ்து மனுஷர் தம்மைப்பற்றி என் நினைப்பார்கள் என்றோ, அல்லது தம்மைப் பிழையாக கருதுவார்கள் என்றோ, அல்லது அவரைப் பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்றோ பயப்படாமல் இருந்தார். அவரிடத்தில் மனுஷபயம் இருக்கவில்லை.
.
மனுஷ பயத்தை மேற்கொள்ளுவதற்கு, நாம் மனுஷரால் பிழையாக கருதப்படவும், பிழையாக புரிந்துகொள்ளப்படவும், உதவி செய்யும் பொழுது, உதவியைப் பெறுபவரினாலே உதாசினப்படுத்தப்படவும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். இந் நிலைக்கு ஒருவன் வரும்போது தான், அவனால் கர்த்தருடைய வார்த்தையை தைரியமாகவும், சுயாதீணமாகப் பேசவும், நாம் பேசுவதை அதைக் கேட்கின்றவர்கள் விளங்கிக்கொள்ளாமல் போனாலும், அதைக் குறித்து குழப்பமடையாதவர்களாய் இருக்க முடியும்.

No comments:

Post a Comment